Home Uncategorized இன்சுலின் இரத்த பரிசோதனை என்றால் என்ன?

இன்சுலின் இரத்த பரிசோதனை என்றால் என்ன?

இன்சுலின் இரத்த பரிசோதனை என்றால் என்ன?

இன்சுலின் இரத்த பரிசோதனை என்பது ஒரு நபரின் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அளவிடும் ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும். உங்கள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு இந்த சோதனை மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

இன்சுலின் எனப்படும் ஹார்மோன் இரத்த சர்க்கரையை இரத்த ஓட்டத்தில் இருந்து செல்களுக்கு மாற்றுவதற்கு உதவுகிறது, இது குளுக்கோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் மூலம் குளுக்கோஸ் கிடைக்கும். இது உங்கள் உடலுக்கு முதன்மையான ஆற்றல் மூலமாகும்.

குளுக்கோஸின் சரியான அளவைப் பராமரிப்பது பெரும்பாலும் இன்சுலினைச் சார்ந்தது. குளுக்கோஸ் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

இன்சுலின் இரத்த பரிசோதனை என்றால் என்ன? - Dinamani news - இன்சுலின் இரத்த பரிசோதனை,  இரத்த பரிசோதனை

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்

1. அதிகமாகச் சிறுநீர் கழித்தல்.

2. அதிகத் தாகம்.

3. அதிகப் பசி.

4. உடல் சோர்வு.

5. உடல் எடை குறைதல்.

இன்சுலின் இரத்த பரிசோதனை யாருக்குத் தேவை?

# மேற்சொன்ன அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

# நீரிழிவு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்தஅழுத்தம், உடற் பருமன் உள்ளவர்கள் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

# ஏற்கெனவே அதிக எடையுடன், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்களுக்கும் மயக்கம், ஆறாத புண், அறுவைசிகிச்சை, கர்ப்பம், பல் அகற்றுதல் போன்ற சூழ்நிலைகளிலும் இப்பரிசோதனை தேவை.

ரேண்டம் இன்சுலின் இரத்த பரிசோதனை (Random Blood Sugar RBS)

# இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

# இதில் ரத்தச் சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு.

# இது 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

# முதல்முறையாக இதைச் செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் இன்சுலின் இரத்த பரிசோதனை (Fasting Blood Sugar – FBS)

# இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து, வெறும் வயிற்றில் இதைச் செய்ய வேண்டும்.

# இதில் ரத்தச் சர்க்கரை அளவு 80 முதல் 110 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது சரியான அளவு. நீரிழிவு இல்லை.

# இந்த அளவு 110 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. அதாவது ‘பிரீ டயாபடிஸ்’. அவருக்கு நீரிழிவு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கும் அலாரம்.

# இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.

சாப்பிட்ட பின் இன்சுலின் இரத்த பரிசோதனை (Submit Prandia# Blood Sugar PPBS)

# காலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

# இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர்கள், வழக்கமாகச் சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

# இதில் ரத்தச் சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால், சரியான அளவு.

# இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், ‘பிரீ டயாபடிஸ்’.

# இது 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது.

முதன்முதலில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று முடிவு செய்வதற்கு, வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்தச் சர்க்கரையை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை அளவிட வேண்டும். இரண்டு முறையும் அளவுகள் அதிகமாக இருந்தால், அவருக்கு நீரிழிவு உள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம். ஒருமுறை ரத்தச் சர்க்கரை அதிகமாகவும், மறுமுறை சரியாகவும் இருந்தால், ‘ஓஜிடிடி’ (OGTT) பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

நீரிழிவுக்கான HbA1c – இன்சுலின் இரத்த பரிசோதனை

எமது குருதியில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களில் (செங்குழியங்களில்) ஹீமோகுளோபின் (Haemoglobin) எனும் இரும்புப் புரதம் உள்ளது. எமது சுவாசத்தின் மூலம் கிடைக்கும் ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபினாக மாற்றி உடல் கலங்களுக்கு செங்குழியங்கள் என்ற படகின்மூலம் எடுத்துச்சென்று சக்தியை வழங்க இது உதவுகின்றது.

இவ்வாறு உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சுற்றித்திரியும் போது குருதியில் இருக்கும் குளுக்கோசானது சிறிதளவு இந்தக் ஹீமோகுளோபினிலும் ஒட்டிக் கொள்ளும்தன்மையைக் கொண்டிருக்கிறது. அத்துடன் குருதியில் அதிகளவு குளுக்கோஸ் இருக்குமானால் அது அதிக வீதத்தில் இந்த ஹீமோ குளோபினில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு குளுக்கோஸ் ஹீமோகுளோபினுடன்
ஒட்டிக்கொண்டிருப்பதை HbA1c பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

ஒருமுறை குருதியில் இருந்து கிரகித்துக்கொண்ட குளுக்கோசை செங்குழியங்கள் தமது வாழ்நாள் முடியும்வரை தம்முடனே வைத்துக் கொள்ளும், ஒரு சிவப்பு அணுவின் வாழ்வுக் காலம் 120 நாள்கள். இந்தச் சிவப்பு அணுக்களில் படிந்துள்ள குளுக்கோசின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் சராசரி குருதியில் குளுக்கோசின்மட்டத்தை HbA1c பரிசோதனை மூலம் அறியலாம்.

ஒரு நோயாளிக்கு செய்யப்படும் இன்சுலின் இரத்த பரிசோதனைகளான, வெறும் வயிற்றில் சாப்பிடாமல் 8 மணித்தியாலங்கள் இருந்து செய்யப்படும் Fasting blood sugar (FBS), சாப்பிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின் செய்யப்படும் குருதிப்பரிசோதனை Submit Brandial blood sugar (PPBS) சாதாரணமாக குத்திப் பார்க்கும் குருதிப் பரிசோதனை Random blood sugar(RBS), போன்றவை நோயாளியின் உணவு முறை மருந்துகள்,உடற்பயிற்சி மற்றும் வேறு நோய் நிலைகள் என்பவற்றால் மாறுபடும். ஆனால் HbA1c சோதனையானது இவற்றினால் மாற்றம் அடைவதில்லை.

HbA1c இன்சுலின் இரத்த பரிசோதனை முடிவின் மூலம் ஒருவருக்கு நீரிழிவுநோய் உண்டா? இல்லையா? நீரிழிவை நோக்கிச் செல்கிறாரா? அவருக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பவை போன்றவற்றை மதிப்பிட முடியும்.

நோயாளிக்கு நீரிழிவு சம்பந்தமான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வைத்தியரின் துல்லியமான மருத்துவ சிகிச்சைக்கும் இந்தப் பரிசோதனை உதவியாக இருக்கும்.

சாதாரணமாக ஒருவருக்கு மேற்படி இன்சுலின் இரத்த பரிசோதனை செய்யும்போது, உதாரணமாக 4 5.6 வரை சாதாரணம் (நீரிழிவு அல்லாத நிலை) 5.7 6.4 வரை நீரிழிவுக்கு முந்திய நிலை (Pre Diabetis) 6.5க்கு மேல் நீரிழிவு நிலை Diabetis என குறிப்பிடலாம்.

பலவகையான நோய்களையுடைய வயது முதிர்ந்தவர்களிலும் HbA1c இலக்கானது 7.5 அல்லது 8 ஆக வைத்திய ஆலோசனைப்படி பேணப்பட வேண்டும்.

நீரிழிவு ஏற்பட்ட பின்பு ஒருவருடைய HbA1c நிலையை ஏறக்குறைய ஏழாக வைத்திருந்தால், அவர் நீரிழிவுடனும் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறார் எனக்கருதலாம்.

இளம் வயதான நீரிழிவுநோயாளி ஒருவரின் HbA1c இலக்கை 6.5 ஆகக்கூட வைத்திய ஆலோசனையின் பின் பேணமுடியும்.

HbA1c 9 வீதத்துக்கு மேலாகவும், குருதியின் குளுக்கோசின் மட்டமும் தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் இருக்குமானால், அவரது கண்களைக் கண் மருத்துவரிடம் பரிசோதிப்பது கண் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவசியமாகும்.

நீரிழிவு நோய் ஏற்பட்ட ஒரு நோயாளியின் HbA1c இனை 7க்கு மேல் அதிகரிக்காமல் வைத்திருக்க முயற்சிப்பதன் மூலம், அவர் பல வகையான பாதிப்புக்களில் இருந்தும் விடுபடலாம்.

எமது உடலில் ஏற்படும் சிலநோய்நிலைமைகளில் HbA1c காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. (Kidney failure) சிறுநீரக தொழிற்பாடு குறைதல் மற்றும் குருதியில் காணப் படும் கொழுப்பில் முக்கிளிசரைட்டின் அளவு கூடிக்காணப்படும். (Hypertriglycendemia) நிலையிலும் மற்றும் தொடர்ச்சியாக அதிகளவு மதுபானம் அருந்துபவர்களுக்கும் HbA1c கூடிக் காணப்படும்.

அதேபோல் HbA1c குறைந்து காணப்படும் நிலைமைகள் தீவிர அல்லது நாள்பட்ட குருதி இழப்பு (Acute or chromic blood loss) மற்றும் சிகெல்செல் அன்மீயா (Sickle cell sickness) மற்றும் தலசீமியா (ThalaSSemia) என்பனவாகும்.

HbA1c, இரத்தம் எடுக்கும் நேரத்தில் தங்கியிராத நுணுக்கமான இரத்தப் பரிசோதனையாகும். அதாவது உணவு உண்டபின் எடுக்கப்பட்டதா அல்லது வெறும் வயிற்றில் எடுக்கப்பட்டதா? போன்றவற்றில் தங்கியிராத பரிசோதனையாகும்.

Glycosylatsd heamoglobin HbA1c மூலம்செங்கலங்களை உட்கிரகிக்கப்பட்ட குளுக்கோசின் அளவை அளவிடுவதன் மூலம் ஒருவரின் மூன்று மாதங்களுக்கான இரத்தக் குளுக்கோசின் சராசரி அளவு மட்டம் பற்றிய தகவல்களைப் பெறமுடியும். இந்தப் பரிசோதனை 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருதடவை செய்தால் போதுமானதாகும்.

பால் பாகுபாடன்றி 45வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோய்க்குரிய குருதிப்பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

எமது சமுதாயத்தில் (தெற்காசிய மக்களில்) நீரிழிவுநோய் ஏற்படுவதற்கான அபாயம்மிக அதிக மென்பதால் இளவயதிலேயே அபாயக் காரணிகள் இருப்பின் (hazard parts) பரிசோதனை அவசியமாகும்.

* ஒருவருக்கு Fasting blood sugar 101-125 mg/dl

* பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்களின் பிள்ளைகள்

* கர்ப்பிணியாக இருக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்தில் நீரிழிவு நோய் இருந்தவர்கள்.

* அதிக நிறையுடையவர்கள்.

* கூடிய மன அழுத்தம் உடையவர்கள்.

* நீரிழிவு நோய் இருக்கிறதா எனச் சந்தேகம் கொண்டவர்கள்.

* நீரிழிவை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை உதாரணம் ஸ்ரீரீரொய்ட்ஸ் (Steroids) பயன்படுத்துபவர்கள்.

தங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா என மேற்கூறிய வகையினர் HbA1c குருதிப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

HbA1c பரிசோதனையானது குறித்ததராதரமுடைய ஆய்வு கூட்டத்திலேயே செய்து கொள்ளப்பட வேண்டும்.

HbA1c கூடுதலாகக் காணப்படும்போது மற்றைய குருதிச் சோதனைகளையும் (Fasting blood sugar எனப்படும் உணவருந்தாது மேற் கொள்ளும் குளுக்கோசின் அளவு மற்றும் உணவு அருந்தியபின் 2 மணி நேரத்தில் மேற்கொள்ளும் PPBS குளுக்கோசின் அளவு என்பவற்றை மேற் கொண்டு வைத்திய ஆலோசனையின் பேரில் நீரிழிவை உறுதிசெய்து தேவையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

சாதாரணமாக இல்லாத குளுக்கோஸ் அளவுகள் பின்வருமாறு:

ஹைப்பர் கிளைசீமியா: hyperglycemia

இது மிக உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவுகளின் நிலை. உங்கள் உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது, ​​​​அது ஏற்படுகிறது. போதுமான இன்சுலின் குளுக்கோஸ் உங்கள் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது. மாறாக, அது இரத்த ஓட்டத்தில் உள்ளது.

கைபோகிலைசிமியா: hypoglycemia

குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்று குறிப்பிடப்படுகின்றன. உங்கள் உடல் அதிக இன்சுலினை இரத்த ஓட்டத்தில் வெளியிட்டால், அதிகப்படியான குளுக்கோஸ் உங்கள் செல்களுக்குள் நுழையும். இதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் குறைவாகவே உள்ளது.

அசாதாரண குளுக்கோஸ் அளவுகளுக்கு மிகவும் அடிக்கடி காரணம் நீரிழிவு நோய். நீரிழிவு இரண்டு வெவ்வேறு வடிவங்களில் வருகிறது.

நீரிழிவு வகை 1 நீரிழிவு வகை 2

டைப் 2 நீரிழிவு இன்சுலின் எதிர்ப்பிற்கு முன்பே அடிக்கடி உருவாகிறது. இன்சுலின் பற்றாக்குறையை ஈடுகட்ட, இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக உடல் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது.

இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதால் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம். ஆனால் காலப்போக்கில், இன்சுலின் எதிர்ப்பு பொதுவாக மோசமாகிறது. இது இறுதியில் இன்சுலின் உற்பத்தி செய்யும் உங்கள் உடலின் திறனைக் குறைக்கிறது.

இன்சுலின் அளவு குறையும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நிலை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றால், வகை 2 நீரிழிவு நோய் உருவாகலாம்.

இன்சுலின் இரத்த பரிசோதனை எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

இரத்தச் சர்க்கரைக் குறைவின் மூலத்தைக் கண்டறியவும் (குறைந்த இரத்தச் சர்க்கரை) இன்சுலின் எதிர்ப்பை பகுப்பாய்வு செய்ய அல்லது கண்காணிக்கவும். வகை 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நிலையை கண்காணிக்க சோதனை செய்யப்படலாம்.

வகை 1 நீரிழிவு நோயைக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கு உதவ, இன்சுலின் இரத்தப் பரிசோதனை எப்போதாவது மற்ற பரிசோதனைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படலாம்.

இன்சுலின் இரத்த பரிசோதனையின் போது என்ன நடக்கும்?

கைகளில் உள்ள இரத்த நாளங்களில் இருந்து இரத்தத்தை எடுக்க ஒரு மருத்துவ பயிற்சியாளரால் ஒரு சிறிய ஊசி பயன்படுத்தப்படும். ஊசி போடப்பட்டவுடன் ஒரு சிறிய அளவு இரத்தம் ஒரு சோதனைக் குழாய் அல்லது குப்பியில் சேகரிக்கப்படும். ஊசி உங்கள் உடலில் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ சிறிது வலிக்கும்.

இன்சுலின் இரத்த பரிசோதனைக்கு எப்படி தயார் செய்வது?
சோதனைக்கு முன், ஒருவர் குறைந்தது 8  மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது.

இன்சுலின் இரத்த பரிசோதனையில் ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா?
சோதனையுடன் தொடர்புடைய ஆபத்து எதுவும் இல்லை. சிலருக்கு ஊசி செருகப்பட்ட இடத்தில் சிறிய அசௌகரியம் அல்லது சிராய்ப்பு ஏற்படலாம், ஆனால் பெரும்பாலும் அது விரைவில் போகும்.

Exit mobile version