Home Uncategorized கட்டைக்காட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான மரதன் போட்டி

கட்டைக்காட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான மரதன் போட்டி

சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 07.00மணிக்கு வெற்றிலைக்கேணி சந்தியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுபெற்றது.

குறித்த மரதன் ஓட்ட நிகழ்வில் பல சிறுவர்,சிறுமிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியதோடு பங்குத்தந்தை,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கட்டைக்காட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான மரதன் போட்டி-oneindia news

Exit mobile version