Home இலங்கை செய்திகள் இலங்கையில் மீண்டும் மின் வெட்டா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் மீண்டும் மின் வெட்டா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் உஷ்ணம் காரணமாக மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நாட்டு மக்களிடம் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்