Home Accident news ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் மரணம்.!

ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் மரணம்.!

நுவரெலியா பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாகாஸ்தோட்ட  பகுதியில் வசிக்கும் சிவகுமார் திலக்சன் எனும் 12 வயதுடைய பாடசாலை சிறுவன் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது இன்று 11.02.2024 நண்பகல் ஒரு மணி அளவில் எதேச்சையாக ஊஞ்சலில் கயிறு இறுகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனின் உடல் தற்போது நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக நுவரெலியா பொலீசார் தெரிவிக்கின்றனர்.