Home இலங்கை செய்திகள் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா..!{படங்கள்}

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று(22.02.2024) காலை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாணவர்கள்,விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் புதிதாக தரம் 1இற்கு காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன்,வாழ்த்துக்களும் கூறப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள்,பங்குத்தந்தை,கிராம அலுவலர்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா..!{படங்கள்}-oneindia news

 

Exit mobile version