Home Uncategorized கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgical process என்றால் என்ன?

கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgical process என்றால் என்ன?

Table of Contents

கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgical process என்றால் என்ன?

கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான க்ரிஸ்டலைன் லென்ஸ் மங்கலாகி விடுவதுதான் மிகவும் பிரபலமான கண் நோயான ‘கண் புரை’ (Cataract) என்பது. இதன் காரணமாக கண்பாதை தடிபட்டு உங்களது பார்வையைக் குட நீங்கள் இழக்க நேரிடலாம்.

‘மோதியாபிந்து’ (Motiyabindoo – கண் புரை) என்பது பெரும்பாலும் முதியோர்களை தாக்கும்; ஆயினும் இது குழந்தைகளையும் பாதிக்கலாம். சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் இதனால் பார்வை முழுவதுமாகவும் பறிபோய்விடலாம்.

அதிருஷ்டவசமாக, கண்நோயை உண்டாக்கும் குருட்டுத்தன்மையை மாற்றிவிட முடியும். உங்களது வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளில் மங்கலான பார்வை குறுக்கிடும்போது, கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, பின்னர் . ‘மோதியாபிந்து’ (Motiyabindoo – கண்புரை) அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

மேலும், கண் புரை அறுவை சிகிச்சையை செய்து கொள்வதை தாமதப்படுத்தினால் உயர் கண் ரத்த அழுத்தம், ஆப்டிக் டிஸ்க் சேதமடைவது, க்ளூகோமா போன்ற பிற கோளாறுகள் உருவாகவும் வழிபிறக்கும்.

கண் புரை அறுவை சிகிச்சையை சரியான நேரத்தில் செய்து கொள்ளுமாறு ஆலோசனை தரும் உங்களது டாக்டர் அறுவைச் சிகிச்சையையும் செய்வார். கண்புரை அறுவை சிகிச்சையை செய்து முடிக்க மொத்தமே 20-30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மருத்துவமனையில் இரவு தங்க வேண்டிய அவசியமே இராது.

கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgery என்றால் என்ன? - Dinamani news - கண்புரை, கண்புரை அறுவை சிகிச்சை என்றால், கண்புரை அறுவை சிகிச்சை, Cataract surgery, Cataract surgery என்றால் என்ன?

கண்புரை அறுவை சிகிச்சைக்கு எப்படி தயார் செய்து கொள்வீர்கள்?

கண் புரை அறுவை சிகிச்சைக்கு உடல், உணர்வு, உளவியல் ரீதியான முன்னேற்பாடுகளும் நிதியுதவியும் தேவை.

கண்புரை அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறும்போது உறவினர் (அ) ஒரு நெருங்கிய நண்பருடன் சென்றால் நல்லது. கண் புரை சிகிச்சைக்கான சரியான வகையான லென்ஸை தேர்வு செய்யும் முடிவெடுக்கவும் இது உதவும்.

கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன், மருத்துவர் ஒருவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்து உடலின் செயல்பாடு மற்றும் பொதுவான அலகுகளான இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ECG ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவும்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு உண்பதற்கு சிலவகை மருந்துகளை உமது கண் மருத்துவர் உமக்குப் பரிந்துரைக்கலாம்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன்னர்

அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் எவ்வித திரவ, திட உணவையும் உட்கொள்ள வேண்டாமென உமது கண் மருத்துவர் உமக்குப் பரிந்துரைக்கலாம்.

தொற்று அபாயத்தை குறைக்க அறுவை சிகிச்சைக்கு 1 நாள் முன்னர் ஆண்டிபயாடிக் ஐ ட்ராப்களை (antibiotic eye drops) விட்டுக் கொள்ளுமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

கண் புரை அறுவை சிகிச்சை நாளில் உங்களுக்கு துணையாக உங்களது உறவினர்/நண்பர் யாராவ்து அருகிலிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். உளவியல் சார்ந்த உதவியாகவோ, விண்ணப்பம் பூர்த்தி செய்யும் உதவியாகவோ ஒப்புதல் தருவதற்காகவோ இது இருக்கலாம். இதனால் சிகிச்சை முடிந்தபின் எவ்வித பிரச்சினையுமின்றி வீடு திரும்ப உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

கண் புரை அறுவை சிகிச்சையின்போது

கண்புரை அறுவை சிகிச்சை என்பது துரிதமாக செய்யப்படும் நிகழ்முறை; மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல், சிகிச்சை முடிந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் அன்றே உங்களால் வீடு திரும்ப முடியும். சிகிச்சைக்காக வருவது முதல் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவது வரை 2-3 மணிநேரங்களில் அனைத்துமே முடிந்து விடும்.

கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgery என்றால் என்ன? - Dinamani news - கண்புரை, கண்புரை அறுவை சிகிச்சை என்றால், கண்புரை அறுவை சிகிச்சை, Cataract surgery, Cataract surgery என்றால் என்ன?

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர்

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் பயன்படுத்தி, தரப்படும் அறிவுரைகளின்படி நடக்கவும். மருத்துவமனைக்கு வந்து ஒப்புதல் பெறாமல் வேறெந்த மருந்துகளையும் உட்கொள்ளாதீர்கள்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் வலி, வெளிச்சத்தால் கண்கூசுதல், நீர் வடிதல் அல்லது சிவப்பாவது போல் இருந்தால் இதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

தொடர் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதை தவிர்க்காதீர்கள்.

கண் புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கண்ணைப் பராமரிப்பது

கைகளால் உங்களது கண்களைத் தொடுவதை தவிர்க்கவும்.

ஒவ்வொரு நாளும் கழுத்துக்குக் கீழுள்ள பகுதியை மட்டும் தேய்த்துக் குளிக்கவும்;

10 நாட்கள் வரை ஷேவிங் செய்யாமல் இருக்கவும்.

கொதிக்கும் நீரில் பஞ்சை 10 நிமிடங்க்கள் வரை வைக்கவும். பின்னர் அது சில்லென்று ஆனவுடன், சுத்தமான கைகளால் பஞ்சை அழுத்தி வரும் நீரால் இமைகளையும் கண்ணின் ஓரங்களையும் சுத்தம் செய்து வரவும்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனபின் குறைந்தபட்சம் 8 நாள் வரை தூசி அதிகமுள்ள பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.

இரண்டு வாரங்கள் வரை கண்ணாடி அணிந்து உங்களது கண்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்.

குழந்தைகள் அருகில் இருந்தால் மிகவும் கவனமாக இருக்கவும்; அவர்கள் கண்ணருகில் வந்து பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

கனமான பொருட்களைத் தூக்காமல், மிகவும் முக்கி மலம் கழிக்காமல் இருக்கவும். மலச்சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரை சென்று பார்க்கவும்.

ஓரிரண்டு நாட்கள் வரையிலாவது படிக்காமல் (அ) தொலைக்காட்சி பார்க்காமல் இருக்கவும்.

படுக்கையின் ஒருபுறமாகப் படுப்பதை (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் இருக்கும் பக்கம்) 2-3 நாட்கள் வரை தவிர்க்கவும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் தேர்ச்சி பெறுதல்

கண் புரை அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பார்வைத்திறன் மேமபடுவதற்கு அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது சிலமணி நேரங்களாவது ஆகும். ஆனால் சிகிச்சை முடிந்த பின்னர் சில வாரங்கள் வரை சில முன்னெச்சரிக்கைகளை நோயாளி கடைப்பிடித்தாக வேண்டும். சிகிச்சைக்குப் பின்னர் வேறெந்த பக்க விளைவு (அ) சிக்கல்கள் எழாமல் இருக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

கண்புரை அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள்

கண் புரை அறுவை சிகிச்சை பாதுகாப்பானதாக, வெற்றியடைய வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்குமாறு உள்ளது என்றாலும் இதுவும் மற்ற அறுவைச் சிகிச்சை போலத்தான். இதற்கென சில பக்க விளைவுகளும் சிக்கல்களும் தோன்றாமல் இருக்காது.

அறுவை சிகிச்சையின்போது, பின்புற லென்ஸ் காப்ஸ்யூல் உடைந்து மங்க்கலான லென்ஸின் உடைந்த பாகங்கள் லென்ஸுக்கு பின்னாலிருக்கும் உடலுக்குள் நுழையலாம். எனவே, இன்னொரு முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

கண்புரை அறுவை சிகிச்சை நடைபெறும்போது சில நேரங்க்களில் கண்ணுக்குள் இரத்தம் வடியலாம்.

கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgery என்றால் என்ன? - Dinamani news - கண்புரை, கண்புரை அறுவை சிகிச்சை என்றால், கண்புரை அறுவை சிகிச்சை, Cataract surgery, Cataract surgery என்றால் என்ன?

கண்புரை அறுவை சிகிச்சையுடன் தொடர்பான அபாயங்கள் & சிக்கல்கள்

கண்ணுக்குள் தொற்று ஏற்படுதல்
கண்ணுக்குள் கண் பொங்கி விடுதல்
கண் அழுத்தம் அதிகரித்தல்
கார்னியா உள்ளிட்ட இடங்கள் சிறிது நேரம் வரை மங்கலாகுதல்
ரத்தத்தை நீர்க்க வைக்கும் மருந்துகளால் கண்பகுதி கறுப்பாக ஆகுதல் (அ) காயம் பட்டது போல் தெரியுதல்
ரெடீனா தனியாக வந்து விடுவது
க்ளூகோமா (Glaucoma)
இன்ட்ரா-ஆகுலர் லென்ஸ் (intraocular lens) சிறிதான அளவில் (அ) முழுமையாக நகர்ந்து விடுதல்
கண்ணிமைகள் சுருங்குதல் (ப்டோசிஸ் – Ptosis)

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் (அணியவேண்டிய) கண்ணாடி

கண் புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கண்ணாடி அணிந்தால் பிரச்சினை இல்லை என நினைக்கும் நோயாளிகள் தமது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மோனோ-ஃபோகல் கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம்.

பெயரில் இருப்பது போல் இவ்வகை செயற்கை லென்ஸ்களில் ஒரு குவியப்புள்ளி மட்டுமே இருக்கும்: அதாவது கிட்டப்பார்வை (அ) தூரப்பார்வை (அ) அருகாமை பார்வை. எனினும், தற்போது இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் கண்ணாடிகளை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பல குவியங்கள் (அ) முக்குவியம் உள்ள லென்ஸ்களால் கண்ணாடியை சார்ந்திருப்பதை முழுதும் தவிர்க்கலாம். உங்களது கண் மருத்துவரிடம் இவ்வகை IOL-கள் பற்றிய தேர்வு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தி பின்னர் பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறியளவிலான கண் கோளாறுகள் இருப்பது ஒருவேளை தெரியவந்தால், அதற்காக கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உங்களுக்கு ஏற்படலாம்.

முதன்மை அறுவை முறைகள்

இரண்டு முதன்மையான அறுவைமுறை வகைகள் உலகெங்கும் வழக்கில் உள்ளன. முதல் அறுவைமுறை வில்லைக் குழம்பாக்கம் எனப்படுகிறது;

இரண்டாவது அறுவைமுறையில் இருவகை புறவிழியுறை கண்புரை பிரிப்புகள் (புவிகபி- ECCE) அமைகின்றன.

பெரும்பாலான அறுவைகளில் கண்ணக வில்லைகள் பொருத்தப்படுகின்றன. 2 முதல் 3 மிமீ அளவு வில்லைப் பிரிப்புக்குப் பொதுவாக மடிதகவு வில்லைகளும் பெரிய புறவிழியுறை பிரிப்புக்கு மடியாத வில்லைகளும் பொருத்தப்படுகின்றன.

வில்லைக் குழம்பாக்க அறுவை முறையில் 2முதல் 3 மிமீ அளவு பிரிப்பே பயன்படுவதால் இப்பிரிப்பு அல்லது துணிப்பு தையல் போடாமலே மூடப்படுகிறது.

புவிகபி (ECCE) முறை 10 முதல் 12 மிமீ வரையிலான பெரிய புரைபிரிப்பை பயன்படுத்துவதால் இப்பிரிப்பு தையல்வழியாகவே மூடப்படுகிறது. இதனால் இது கையால் செய்யும் சிறுபிரிப்பு கண்புரை அறுவையாக (கைசிகஅ-MSICS) மாற்றிச் செய்யப்படுகிறது. அகவிழியுறை கண்புரை பிரிப்பு முறை வில்லைக் குழம்பாக்க முறையாலும் புறவிழியுறை கண்புரை பிரிப்பு முறையாலும் காலாவதி ஆகிவிட்டது.

வளர்ச்சியுற்ற நாடுகளில் வில்லைக் குழம்பாக்க முறையே பரவலாகப் பயன்படுகிறது. இம்முறையின் கூடுதலான செலவாலும் வில்லைக்குழம்பாக்க எந்திரத்தின் கூடுதல் விலையாலும் அதைச் சார்ந்த கழிதகவுக் கருவியாலும் புவிகபி- ECCE முறையும் கைசிகஅ –MSICS முறையும் வளரும் நாடுகளில் பரவலாகப் பயன்படுகிறது.

கண்புரை அறுவை சிகிச்சை Cataract surgery என்றால் என்ன? - Dinamani news - கண்புரை, கண்புரை அறுவை சிகிச்சை என்றால், கண்புரை அறுவை சிகிச்சை, Cataract surgery, Cataract surgery என்றால் என்ன?

அறுவை முறையின் பல்வேறு வகைகள்

கண்புரை அறுவைக்காக பல்வேறு அறுவை முறைகள் பயன்படுகின்றன:

வில்லைக் குழம்பாக்க முறை (phaco)வளரும் நாடுகளில் பரவலாகச் செய்யப்படும் நுட்பமாகும்.

கையால் செய்யும் சிறுபிரிப்புக் கண்புரை அறுவை முறை

கண்ணக வில்லைகள்

புரைக் கண்ணாடி
புரை கண்ணாடி கடினமானதாக இருக்கும். உருவங்கள் இயல்பை விட பெரியதாகத் தெரியும். பக்கப்பார்வை குறைவாக இருக்கும். இந்தக் குறைகளைச் சரிசெய்ய கண்ணக வில்லைகள் பொருத்தப்படுகின்றன.

கண்ணக வில்லை
தீங்கற்ற நெகிழியால் செய்யப்பட்ட கண்ணக வில்லை (en: Intraocular Lens (IOL)) , அறுவையின்போது கண்ணில் பொருத்தப்படுகிறது. இது கருவிழி ஒட்டுக்கண்ணாடி போல் அல்லாது, கண்ணுக்குள் நிலையாகப் பொருத்தப்படுவதால், கண்ணுக்கு எவ்வகை ஊறும் ஏற்படாது. உடல் அசைவுகளினால் வில்லை தன் இருப்பை விட்டு விலகாது.

கண்ணக வில்லையின் நன்மைகள்

பெரும்பாலும் எட்டப்பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவையில்லை. ஒரு சில நோயாளிகளுக்குத் தெளிவான பார்வைக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படலாம்.

பொருள் உருவங்கள் இயல்பாக ஏற்றம் இறக்கமின்றி தெளிவாகத் தெரியும்.
முழுப் பார்வையையும் விரைவில் பெறலாம்.

தையல் இல்லாத நவீன சிகிச்சை

இம்முறையில் கண்ணில் 5 மில்லி மீட்டர் அளவிற்கு சிறிய துவாரம் போடப்படுகிறது. அல்ட்ராசோனிக் அலைகள் (Ultrasonic waves) உதவியுடன் புரை லென்ஸ் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஊசியின் உதவியுடன் வெளியே எடுக்கப்படுகிறது. பிறகு இதற்காகவே சிறப்பாக செய்யப்பட்ட ஐ.ஓ.எல் லென்ஸ் கண்ணில் பொருத்தப்படுகிறது.

சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் தையல் போட வேண்டிய அவசியம் இல்லை. காயம் விரைவில் குணமாகிவிடும்.

தையல் இல்லாத நவீன சிகிச்சையின் நன்மைகள்

இம்முறையில் புரை முற்றும் வரை காத்திராமல் ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்.

சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

தையல் போடத் தேவையில்லை. கண்ணில் எரிச்சல் ஏற்படாது. நீர் வடியாது, தையல் பிரிக்கும் அவசியமும் ஏற்படாது.

அதிக நாட்கள் ஓய்வு எடுக்கத் தேவையில்லை. விரைவில் பணிகளைச் செய்யமுடியும்.

அதிக நாட்கள் சொட்டு மருந்து உபயோகிக்கத் தேவையில்லை.

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் அல்லது ஒரு நாள் கழித்து வீடு திரும்பலாம்.

அடிக்கடி பரிசோதனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை மட்டும் மறு பரிசோதனைக்கு சென்றால் போதுமானது

ஒரு மாதத்திற்குப் பின் நிலையான பார்வையைப் பெறலாம்.

அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து தொலைக்காட்சி பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம்.

குறிப்பு

கண்ணில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை அணுக வேண்டும்.

ஒரு கண் மருத்துவரால் மட்டுமே பார்வையை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும்.

நோயாளி தையல் இல்லாத நவீன சிகிச்சைக்குத் தகுதியானவரா என்பதைக் கண் மருத்துவரே தீர்மானம் செய்ய முடியும்.