Home இலங்கை செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர் வரும் 20ம் திகதி பாரிய போராட்டம்-அனைவருக்கும் அழைப்பு..!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர் வரும் 20ம் திகதி பாரிய போராட்டம்-அனைவருக்கும் அழைப்பு..!

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி வேண்டி எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அழைப்பு விடுத்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றது. எங்களுடைய பிள்ளைகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்காது சர்வதேசத்திடம் நீதியை வேண்டி நிற்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.