கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று(17-02-2024) பகல் விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
இன்று பகல் 10-மணிக்கு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டச் செயலக உதவி மாவட்ட செயலாளர் உத்தியோகத்தர்கள் ஆகியோரால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்
தொடர்ந்து. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்ய ப்பட்ட 40 பயனாளிகளுக்கும் கண்டாவளை , பச்சிலைப்பள்ளி, பூனகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்ய ப்பட்ட தலா 20 பயணாளிகளுக்கும் என 100 பயனாளிகளுக்குமான இலங்கை இந்திய நட்புறவிறவின் கீழ் உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.