Home இலங்கை செய்திகள் குவைத் தூதுவருடன் எம்.எஸ். தௌபீக் சந்திப்பு!

குவைத் தூதுவருடன் எம்.எஸ். தௌபீக் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் மற்றும் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃப் எம்.எம். பூ தாஹீர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

குவைத்திற்கும் இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இச்சந்திப்பின் போது நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் எமது நாட்டு மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்ட மக்களின் வாழ்வாதார நிலைப்பாடு, கல்வித் தேவைகள் மற்றும் மீனவர்கள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தூதுவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வெளிநாட்டு வேலைவாவாய்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் அல் – ஹிக்மா பவுண்டேசன் தலைவர் இபாதுல்லாஹ் மௌலவியும் கலந்துகொண்டிருந்தார்.

குவைத் தூதுவருடன் எம்.எஸ். தௌபீக் சந்திப்பு!-oneindia news

Exit mobile version