Home jaffna news கோர விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் இறுதி அஞ்சலி..!{படங்கள்}

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் இறுதி அஞ்சலி..!{படங்கள்}

கடந்த வெள்ளிக்கிழமை மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனான செல்வன் சி.பரணிதரனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மேற்படி மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் செல்லும் போது இ.போ.ச பேருந்து மோதி உயிரிழந்திருந்தார்.

மாணவனின் மரணச்சடங்கு 05/03 செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இடம்பெற்று தனங்கிளப்பு வீதியில் உள்ள கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்பட்ட சந்தப்பத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் டிறிபேர்க் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.
சக மாணவர்கள் அன்னாரது உடலை தோளில் சுமந்துகொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோர விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் இறுதி அஞ்சலி..!{படங்கள்}-oneindia news

Exit mobile version