யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம்மத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு ஆச்சிரிம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இன்று 8.03.2024 காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது
முதல் நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதப்பட்டதை தொடர்ந்து
சைவப்புபவர் கந்தசாமி கைலைநாதன் அவர்களின் சிவராத்திரி தொடர்பான சொற்பொழிவு இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 10 மாணவி ஒருவருக்கும், உடுவில் மகளிர் கல்லூரி தரம் பத்து மாணவி இருவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.