Home இலங்கை செய்திகள் நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய சிங்களத்தின் சிங்க தலைவன்..!

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய சிங்களத்தின் சிங்க தலைவன்..!

இலங்கை மக்களால் அடித்து துரத்தப்பட்ட ஜனாதிபதியாக சித்தரிக்கப்படும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீண்ட நாட்களுக்கு பின் நேற்றைய தினம் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார்.

அதாவது, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தினால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விழாக்களிலும் பொது இடங்களிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்தநிலையில், கொழும்பு, குனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெரா தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, ரணில் விக்ரமசிங்கவுடன் கோட்டாபய ராஜபக்சவும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய சிங்களத்தின் சிங்க தலைவன்..!-oneindia news

இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் இந்த விடயம் அரசியல் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.