Home இலங்கை செய்திகள் மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!

மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.

ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்யச் சென்ற 3 பேரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹம்பாந்தோட்டையில் இருந்து குருநாகல் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கலனிகம போக்குவரத்து பிரிவு, தீயணைப்பு மற்றும் உயிர் காக்கும் பிரிவின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 20 நிமிட நடவடிக்கைக்கு பின் இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி 3 பேரையும் மீட்டுள்ளனர்.

சிறிய ரக லொறியின் சாரதி தூங்கியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் சிறிய ரக லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரத்கம பகுதியைச் சேர்ந்த கமல் சொய்சா என்ற 55 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.