Home jaffna news யாலில் திகதி முடிந்த மென் பானங்களை காட்சிபடுத்திய வர்த்தகருக்கு நேர்ந்த கதி..!

யாலில் திகதி முடிந்த மென் பானங்களை காட்சிபடுத்திய வர்த்தகருக்கு நேர்ந்த கதி..!

சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரம் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஆகியவற்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த காலாவதியான சோடா மற்றும் நெக்டர் பானங்கள் என்பன மீட்கப்பட்டன.

அதனை அடுத்து குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்குகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது மன்றில் முன்னிலையான வர்த்தகர்கள் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , நெக்டர் பானத்தை வைத்திருந்த உணவகத்திற்கு 20000 ஆயிரம் ரூபாவையும், சோடா வைத்திருந்த வர்த்தக நிலையத்திற்கு 8000 ரூபாவையும் தண்டமாக விதித்ததுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடவும் கட்டளையிட்டது.