தரம்-6க்கு புதிதாக இணைத் துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் – 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகையால் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளான்.
நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
தரம்-6 இல் புதுமுக மாணவனாக அந் தப் பாடசாலைக்குச் சென்றுள்ளான். மறுநாளே தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் இணைந்து புதுமுக மாணவனைத் தாக்கியுள்ளனர்.
மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது.