Home jaffna news யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!

யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!

சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.