Home jaffna news வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் 2024.01.05 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது (2024.02.16) விசாரணை இடம்பெற்றது.
சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் கரப்பான்பூச்சி மற்றும் புழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.
என்பதுடன் மேற்குறித்த வழக்கானது இன்றைய தினம் மன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுச்சுகாதார பரிசோதகரினால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டிருந்ததுடன் வழக்கானது கட்டளைக்காக 2024.03.07 இற்கு திகதியிடப்பட்டது.
வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news