Home இலங்கை செய்திகள் வாயு துப்பாக்கியால் சுட்டு விளையாடிய சிறுவர்களில் ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!

வாயு துப்பாக்கியால் சுட்டு விளையாடிய சிறுவர்களில் ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!

இரு சிறுவர்கள் வாயு துப்பாக்கியினால் சுட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர் இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

வேவல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சத்திர சிகிச்சைக்குட்படுத்தவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தங்கோவிட்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.