Tag: பிக்கு

HomeTagsபிக்கு

மது போதையில் நடமாடிய பௌத்த பிக்கு கைது

காலி பகுதியில் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் நல்லதண்ணி நகரில் மது போதையில் நடமாடிய நிலையில்  நேற்று மாலை நல்லதண்ணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பௌத்த மதத்தைச் சேர்ந்த பிக்கு காலி பகுதியில் உள்ள பிரபல பௌத்த விகாரையைச் சேர்ந்தவர் எனவும் நேற்று மாலை சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் இவர் அதிகளவில் போதையில் நடமாடியதை தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்று காலை […]

13 வயது இரட்டையர்களை துவம்சம் செய்த பிக்கு..!

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்கள் தேரர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில […]

மத்திய வங்கி ஊழியர்கள் தொடர்பில் பிக்கு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மத்திய வங்கி ஊழியர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அரச ஊழியர்களும் இதுபோன்ற சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, நேற்றையதினம் சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றதையடுத்து, தனது கருத்துக்களை வெளியிடும் போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் போது மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு […]

பிக்கு கொலை தொடர்பில் அழகி கைது..!

மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியமை மற்றும் உண்மையை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில – வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரான பெண், வெரகல – தேவகல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

முஸ்லீம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய பிரபல பிக்கு..!

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை […]

கொழும்பு வீடொன்றில் இரு பிக்கு உட்பட மூவர் செய்த காரியம்..!

பம்பலப்பிட்டியிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான பழைய மூன்று மாடி வீடொன்றின் பூட்டை  உடைத்து உள்நுழைந்து அங்கு தங்கியிருந்தமை  தொடர்பில்  இரு  தேரர்கள் உட்பட மூவரைக்  கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாலம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும்  இரு தேரர்கள் உட்பட மூவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தேரர்கள் உட்பட மூவர் தனது தனது வீட்டின் பூட்டை உடைத்து உள்நுழைந்து  அங்கு பலாத்காரமாக  தங்கியிருப்பதாக  வீட்டின் உரிமையாளர் எனக் கூறிக்கொள்ளும் பெண் […]

வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்

வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நின்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இராணுவ பாதுகாப்புடன் வருகைதந்த பிக்கு குழு ஆலய வளாகத்தை பற்றி கலந்துரையாடியததோடு இந்து கோயிலின் சின்னங்களை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக சப்பாத்துக்காலுடன் நடந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது

மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டையில் விவசாயிகளுக்கு சொந்தமான காணிக்குள் அடாத்தாக புகுந்த பிக்கு அராஜகம்

பிக்கு ஒருவர் டோசர் இயந்திரங்களைக் கொண்டு தனது சகோதரனுடன் இணைந்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பவம் ஒன்று புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. புல் மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின்...

RECENT NEWS