Tag: ஆசிரமத்தால்
சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாற்றை சந்நிதியான் ஆ்சிரமத்தால் தொண்டமனாறு சூழலிலுள்ள கிராமங்களை சேர்ந்த 526 மாணவர்களுக்கு ரூபா 676,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 21/02/2024 நேற்று புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வழங்கிவைக்கப்பட்டன. ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ் கல்விச் செயற்றிட்டத்தை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கினார்.
சந்நிதியான் ஆசிரமத்தால் பெரும் உதவி..!{படங்கள்}
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 20.02.2024 செவ்வாய்க்கிழமை பல இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை கோப்பாயின் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸ்சன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டன. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகலதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்தார்.