Tag: கடற்படையால்
ஒளி பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது.
ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று(13)) ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வெற்றிலைக்கேணியை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட 10 மீனவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலில் திடீரென ஏற்றப்பட்ட தேசிய கொடியால் குழப்பம்..!{படங்கள்}
1994.02.18 அன்று வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில்(18) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கையின் தேசிய கொடி திடீரென ஏற்றப்பட்டதால் உறவுகளை இழந்த மக்கள் அதிர்ச்சியடைந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் முன்னின்று செயற்படுத்திய இந்த நிகழ்வில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக தமக்கு […]