Home Tags கோர

Tag: கோர

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!-oneindia news

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!

0
கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோர விபத்து-4 வயது சிறுவன் பலி..!-oneindia news

கோர விபத்து-4 வயது சிறுவன் பலி..!

0
புத்தளம் – கற்பிட்டி – நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குறித்த சிறுவன் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறி ஒன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் […]
மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!-oneindia news

மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் […]
வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!-oneindia news

வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!

0
தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}-oneindia news

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}

0
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது. லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கோர விபத்து-சம்பவ இடத்திலே இரு தமிழர் பலி..!-oneindia news

கோர விபத்து-சம்பவ இடத்திலே இரு தமிழர் பலி..!

0
அரவக்குறிச்சி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் படுகாயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன் ( 42 ). ஏழூரை சேர்ந்தவர் சரவணன் ( 45 ). இவர்கள் இருவரும் திருச்செந்தூர் செல்வதற்காக காரில் நேற்றிவு புறப்பட்டுள்ளனர். காரை சரவணன் ஓட்டியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கணவாய் ஜக்கம்மாள் கோயில் […]
மற்றுமொரு கோர விபத்து-4 வயது குழந்தை பலி..!-oneindia news

மற்றுமொரு கோர விபத்து-4 வயது குழந்தை பலி..!

0
நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் […]
இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து-மூவர் பலி..!-oneindia news

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து-மூவர் பலி..!

0
பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் […]
நாட்டில் இடம் பெற்ற கோர விபத்துக்கள்-பெண் உட்பட எழுவர் பலி..!-oneindia news

நாட்டில் இடம் பெற்ற கோர விபத்துக்கள்-பெண் உட்பட எழுவர் பலி..!

0
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலியால […]
கொழும்பு-பதுளை வீதியில் மற்றுமொரு கோர விபத்து-சாரதி கவலைக்கிடம்..!{படங்கள்}-oneindia news

கொழும்பு-பதுளை வீதியில் மற்றுமொரு கோர விபத்து-சாரதி கவலைக்கிடம்..!{படங்கள்}

0
கொழும்பு பதுளை பிரதான வீதியில் எல்லபொல பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறி சாரதி பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பலாங்கொடை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RECENT POST