Tag: சடலமாக

HomeTagsசடலமாக

ஸ்பா ஒன்றில் கடமையாற்றிய அழகி சிதைந்த நிலையில் சடலமாக..!

கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  39 வயதுடைய ஒருவரின் மரணம்  தொடர்பில்   எம்பிலிபிட்டிய பிரதேசத்தில்  வைத்து  ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு

கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  39 வயதுடைய ஒருவரின் மரணம்  தொடர்பில்   எம்பிலிபிட்டிய பிரதேசத்தில்  வைத்து  ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...

மலையகத்தை உலுக்கிய சோகம்-நீராட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு..!{படங்கள்}

லிந்துலையில் நீராடச் சென்ற இளைஞன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில்  நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு வருகைத்தந்து நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் தற்போது பிரதேச மக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25)  பிற்பகல் 2 :40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையை சேர்ந்த 14 வயதுடைய  என்.ஜீ […]

யாழில் மற்றுமொரு இளைஞன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு..!

நேற்றையதினம் சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சட லத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

பணிக்கு சென்ற 25 வயது இளைஞன் கிணற்றில் சடலமாக..!

பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் வாகன சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என நேற்று (17) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அந்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் பணிபுரிந்த வாகன சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் அவரது செருப்பு இருந்ததால், கிணற்றை ஆய்வு செய்ததில் அந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் ஹரஸ்கல – மஹாஓய […]

மலையகத்தில் மற்றுமொரு சோகம்-இரு குழந்தைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த மூக்கையா கனகேஸ்வரன் இரண்டு குழந்தைகளின் தந்தை கடந்த 15 ம் திகதி தனது வீட்டில் இருந்து கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போய் உள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவரது மனைவி 16 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். நீரில் […]

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி அலைஸ் பிரியங்கா (40) மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டு காயம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் […]

பாதுகாப்பு உத்தியோகத்தர் கடலில் சடலமாக மீட்பு..!

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(12) மீட்கப்பட்ட இச்சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து […]

மன்னாரிலும் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு..!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில்   13 வயதுடைய சிறுமி ஒருவர்  திங்கட்கிழமை(12) அதிகாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காணாமல் போன நிலையில்,வவுனியாவில் இருந்து மீட்கப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை (11) அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் உள்ள 13 வயதுடைய […]

பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களா, பணிச் சுமையா என்பது தெரியவரவில்லை.

இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு. !

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்  சடலமாக மீட்கப்பட்டுள்ள  சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த  பெண், குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். […]

RECENT NEWS