Tag: தெய்வீகம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு..{படங்கள்}
இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன. வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நாளை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து […]
கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.திருப்பலி நிகழ்வு நாளை(24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவிற்கு பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேரேறி வலம் வந்தாள் நயினை பத்திரகாளி..!{படங்கள்}
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இத் தேவஸ்தானத்தின் உற்சவமானது கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரதோற்சவம் இடம்பெற்றதுடன், எதிர்வரும் 24.02.2024 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையும். இவ்மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர். பூந்தண்டிகை மஹோற்சவத்தில் பல்வேறு இடங்களில் […]
கிளி/ நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா..!{படங்கள்}
வருடாந்தம் நடைபெறுகின்ற மாசி மக தேர்த்திருவிழா இன்றைய தினம் 23.02.2024கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் நெத்தலி ஆறு பகுதியில் அமைந்து அடியார்களுக்கு எல்லாம் அருள் பாலித்து வரும் நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா சிறப்புற ஆலய குரு முதல்வர் ஸ்ரீ காந்தன் குருக்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
நயினை பத்திரகாளியின் பூந்தண்டிகை ஊர்வலம்..!{படங்கள்}
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின் பூந்தண்டிகைத் திருவிழா 19.02.2024 அன்று மாலை சிறப்பாக இடம்பெற்றது. இவ் தேவஸ்தானத்தின் திருவிழா கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 23.02.2024 அன்று இரதோற்சவமும், மறுநாள் தீர்த்ததோற்சவமும் இடம்பெற்று, அன்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையும். இவ் ஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலை மையிலான […]
தெல்லிப்பழை முத்துமாரியம்மனுக்கு மாசி மக இலாச்சர்சனை..!{படங்கள்}
வரலாற்று சிறப்புமிக்க மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன . கருவறையில் அருள்பாலித்து விளங்கும் தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் எனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் முத்துமாரி யம்மனுக்கு மகா இலச்சார்ச்சனை உற்சவம் இடம்பெற்றது. இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பூனைத்தொடுவாய் லூர்த்து அன்னை ஆலய பெருவிழா..!{படங்கள்}
பூனைத்தொடுவாய் லூர்த்து மாதா ஆலய பெருவிழா இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 07.00 ஆரம்பமான குறித்த திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜ் ஒப்புக் கொடுத்தார். தொடர்ந்து லூர்த்து அன்னையின் திருச்சுருபம் பவனியாக எடுத்துவரப்பட்டதோடு அதன்பின் கொடி இறக்கப்பட்டு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. லூர்த்து அன்னையின் பெருவிழாவில் பலர் கலந்து கொண்டு இறையாசி வேண்டிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த உதவிகளும், வாராந்த நிகழ்ச்சிகளும்….!{படங்கள்}
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வுகள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று காலை 10:30 மணியளவில் இடம் பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சைவப் புலவர் திருமதி அண்முகவடிவு தில்லைமணி அவர்களால் குமரகுருபரர் சுவாமிகள் பற்றிய ஆன்மீக அருளுரை காலை 10.40 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்றதை தொடர்ந்து வாராந்த உதவிகளாக. யா/ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் […]
செல்வம் தரும் குபேர சஷ்டி இன்று -இதை செய்து கந்தவேலின் அருளாசியை பெற்று கொள்ளுங்கள்..!
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள். அந்த வகையில் இன்றைய தினம் (15) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த சஷ்டியானது குபேர சஷ்டி என்று சொல்லப்படுகிறது. இந்த சஷ்டி நமக்கு செல்வ வளத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. அத்துடன் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை உடன் வந்திருப்பதால் குருவின் அனுகிரகத்தையும் நமக்கு பெற்று தரும். இந்த வழிபாடு செய்ய விரும்புபவர்கள் காலையில் […]