Tag: பிரேமச்சந்திரன்.!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனமுமற்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தற்போது பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை எதிர்வரும் அமர்வின் போது கொண்டு வருவதாக இருக்கும் தீர்மானம் எந்தவித பயனும் அற்றது என்றும் ஏற்கனவே சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்த கெஹலியவிற்கும் இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு தற்போது அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். எனவே இது போன்ற பிரேரணைகள் நம்பிக்கை அற்றவை பயனற்றவை என சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
தேர்தலைப் பிற்போடுவதை ஏற்க முடியாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.!
தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாது பின்னடிப்பது தொடர்பிலே சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது கருத்தினை வெளியிட்டார். அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொண்டு வரும் அதேவேளை தேர்தலை மாத்திரம் நடத்தாமல் பின்னடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.