Tag: மகளிர்
வாக்களிப்பை தவிர்க்க போகிறோம்-மலையக மகளிர் வீடிவெள்ளி அமைப்பு அதிரடி முடிவு..!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து மலையகப்பகுதியில் குடும்பப் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் பெண்கள் நேற்று (23) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பல குடும்பங்கள் அன்றாட உணவுகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர். பல குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வித்தேவையினைப் பூர்த்தி செய்ய முடியாது இடர்பட்டு வருகின்றனர். குடும்ப சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு பலபெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரங்களை அனுபவித்து நாடு […]
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி […]