Home Tags மரணம்

Tag: மரணம்

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் - வட்டுக்கோட்டையில் சம்பவம்...!{படங்கள்}-oneindia news

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டையில் சம்பவம்…!{படங்கள்}

0
இன்று மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது வீட்டில் […]
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!-oneindia news

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!

0
கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாந்தன் மரணம் இயற்கையானது அல்ல-திட்டமிட்ட படுகொலை-வெளியான அதிர்ச்சி தகவல்..!-oneindia news

சாந்தன் மரணம் இயற்கையானது அல்ல-திட்டமிட்ட படுகொலை-வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்றையதினம் உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள  சட்டத்தரணி புகழேந்தி ”ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அண்ணன் சாந்தன் […]
மற்றுமொரு மர்ம மரணம்..!-oneindia news

மற்றுமொரு மர்ம மரணம்..!

0
தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று (27) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 45 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மகன் தாக்கியதாக முறைப்பாடு-பின்னர் மரணம்..!-oneindia news

மகன் தாக்கியதாக முறைப்பாடு-பின்னர் மரணம்..!

0
தனது மகன் தன்னை தடியால் தாக்கியதாக தொம்பே பொலிஸில் நபர் ஒருவர் நேற்று (21) முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சட்ட வைத்தியப் படிவத்தை பொலிஸார் வழங்கியுள்ள போதும் அவர் வைத்தியசாலையில் அனுமதியாகவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதன்படி நேற்று பிற்பகல் தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிதர சந்திக்கு அருகில் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வீழ்ந்து கிடப்பதாக தொம்பே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்ததுடன், அவர் மேதவரனிய, தித்தபர […]
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர்  மயங்கி வீழ்ந்து மரணம்!!-oneindia news

யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!

0
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி மரணம்..!-oneindia news

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி மரணம்..!

0
இலங்கை கடற்படையின் ஏழாவது (07வது) தளபதி அட்மிரல் பசில் குணசேகர இன்று (17 பெப்ரவரி 2024) காலமானார். 1951 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி இலங்கை கடற்படையில் சேர்ந்தார். 1973 ஜூன் 01 முதல் 1979 மே 31 வரை இலங்கை கடற்படையின் 07 வது தளபதியாக பதவி வகித்தார். மறைந்த அட்மிரல் பசில் குணசேகர 1929 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 18 ஆம் திகதி வரை […]
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் மரணம்.!-oneindia news

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் மரணம்.!

0
காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹாமல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா நகரின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் புதல்வரான 22 வயதான ஹசெம் ஹனியே என்பவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தின் […]
ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் மரணம்.!-oneindia news

ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் மரணம்.!

0
நுவரெலியா பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாகாஸ்தோட்ட  பகுதியில் வசிக்கும் சிவகுமார் திலக்சன் எனும் 12 வயதுடைய பாடசாலை சிறுவன் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது இன்று 11.02.2024 நண்பகல் ஒரு மணி அளவில் எதேச்சையாக ஊஞ்சலில் கயிறு இறுகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் தற்போது நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக நுவரெலியா பொலீசார் தெரிவிக்கின்றனர்.
அவிசாவளையில் ஒருவர் மரணம்.!-oneindia news

அவிசாவளையில் ஒருவர் மரணம்.!

0
06.02.2024 நேற்றையதினம் கொழும்பு மாவட்டம் அவிசாவளை மாதோல இரத்தினபுரி வீதியில் அமைந்துள்ள திரு.கருப்பையா ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இரும்பு சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் வசிக்கும் 48 வயது உடைய கந்தசாமி ஜெகன் (J.H.Ang 753123768V) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அந்த இடத்தில் இரும்புப் பொருட்களுக்கு இடையே இருந்த பழைய ஆக்ஸிஜன் தொட்டி வெடித்ததால் அவர் மரணமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

RECENT POST