Tag: வைத்தியசாலையில்
வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி.
வெடுக்குநாறி மலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிசாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த எட்டுப்பேரையும் விடுதலைசெய்து வவுனியா நீதிமன்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் […]
தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து! – மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ். வைத்தியசாலையில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ! பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள் !
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணத்தில் இரத்த தான முகாம்களை நடாத்த விரும்புவோரை அதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும் , மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பேசாலை வைத்தியசாலையில் ரத்தான முகாம்..!{படங்கள்}
மன்னார் பேசாலை வளர் கலை மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆரம்பமானது. மன்னார் மாவட்ட வைத்திய சாலைகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த குருதி நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது. பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்கு தந்தை மற்றும் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை குருதி கொடை […]
பேசாலை வைத்தியசாலையில் ரத்தான முகாம்
மன்னார் பேசாலை வளர் கலை மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆரம்பமானது.மன்னார் மாவட்ட வைத்திய...
பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!
இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டதன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!
இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதுகுறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட...
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 7 வயது மகளை வைத்து தாய் நடத்திய கூத்து-செய்யாவிட்டால் சிறுமி மீது தாக்குதல்..!
கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடி தாயிடம் கொடுக்காவிட்டால் தனது தாய் தன்னை தாக்குவதாகவும் திருடிய கையடக்கத் தொலைபேசிகளை தனது தாய், தந்தையிடம் கொடுப்பதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தாயின் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் […]
யாழ் போதனா வைத்தியசாலையில் பதற்றம்-ஒருவர் கைது..!{படங்கள்}
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் இன்று (21) கைது செய்யப்பட்டார். காரைநகரில் இருந்து அம்புலன்ஸில் கொண்டுவரும்போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாக தருமாறு வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் அலுவலகத்திற்கு சென்று தகாத வார்த்தைகளை பேசிய குறித்த நபர், அலுவலகர்களுடன் முரண்பட்டு அங்கிருந்த பெயர் பலகையையும் சேதப்படுத்திய நிலையில் வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது குறித்த நபர் மதுபோதையில் இருந்தாக தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேக நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் […]
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.