கிளிநொச்சி செய்திகள்

    Home கிளிநொச்சி செய்திகள்
    கிளிநொச்சியிலும் கோர விபத்து-இரு உயிர்கள் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்..!-oneindia news

    கிளிநொச்சியிலும் கோர விபத்து-இரு உயிர்கள் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்..!

    0
    கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை […]
    கிளிநொச்சியில் இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி! – தேர் கட்டுமானத்தின்போது சோகம்-oneindia news

    கிளிநொச்சியில் இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி! – தேர் கட்டுமானத்தின்போது சோகம்

    0
    தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் நடந்துள்ளது.வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் கட்டுமானப் பணியில்...
    உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்பம்.!-oneindia news

    உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்பம்.!

    0
    இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக “கொமான்டோஸ் கப்” வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப […]
    கிளி/ நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா..!{படங்கள்}-oneindia news

    கிளி/ நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா..!{படங்கள்}

    0
    வருடாந்தம் நடைபெறுகின்ற மாசி மக தேர்த்திருவிழா இன்றைய தினம் 23.02.2024கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் நெத்தலி ஆறு பகுதியில் அமைந்து அடியார்களுக்கு எல்லாம் அருள் பாலித்து வரும் நெத்தடி ஆறு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா சிறப்புற ஆலய குரு முதல்வர் ஸ்ரீ காந்தன் குருக்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
    கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}-oneindia news

    கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}

    0
    கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கட்டைக்காடு தர்மபுரம் பகுதியில் இவற்றின் தாக்கத்தினை அவதானிக்க முடிகிறது.   வைரஸ் நோயான இந்த நோய் வெப்பமான காலநிலையின் போது கால்நடைக்கு பரவி வருகிறது. கடந்த வருடமும் குறித்த நோய்யின் தாக்கமானது கிளிநொச்சி மாவட்டம் அடங்களாக வடமாகாணம் மற்றும் தென் மாகாணங்களிலும் தாக்கம் அதிகரித்திருந்தது .உணவில் நாட்டமின்மை, எழும்பி நடக்க முடியாத நிலை, […]
    வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு - கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!-oneindia news

    வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!

    0
    நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். […]
    கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தோட்ட உரிமையாளர்..!-oneindia news

    கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தோட்ட உரிமையாளர்..!

    0
    கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின்  தோட்டத்துக்குள் அயல் வீட்டு ஆடு சென்று பயிர் அழிவை ஏற்படுத்தியதாக தோட்டத்து உரிமையாளர் ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்துக்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். […]
    சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகருக்கு கடூழிய சிறை தண்டனை!-oneindia news

    சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகருக்கு கடூழிய சிறை தண்டனை!

    0
    கிளிநொச்சி – பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல்...
    தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}-oneindia news

    தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}

    0
    சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது.   பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.   இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி கிளிநொச்சி நோக்கி நகர்கிறது.   இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது.   சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளது.   இந்த […]
    கட்டு துப்பாக்கி வெடித்ததில் போலீஸ்  உத்தியோத்தர்  ஒருவர்படுகாயம்-oneindia news

    கட்டு துப்பாக்கி வெடித்ததில் போலீஸ் உத்தியோத்தர் ஒருவர்படுகாயம்

    0
    தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் கடமையாட்டும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டு துப்பாக்கி வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.இன்றைய தினம் ( 01.02.2024 ) தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு...

    RECENT POST