Home இலங்கை செய்திகள் ஆறுவாரங்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி-சற்று முன் வெளியான தகவல்..!

ஆறுவாரங்களுக்கு மட்டுமே மின்சார உற்பத்தி-சற்று முன் வெளியான தகவல்..!

இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையே இதற்கு காரணம் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 130 கிகாவாட் மணித்தியால மின் உற்பத்தி திறன் உள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நீர்மின் நிலையங்கள் உகந்த நீர் மட்டத்தில் காணப்படுவதுடன், கனமழை காரணமாக கடந்த வாரத்தில் மொத்த நீர் கொள்ளளவு 80 சதவீதத்தை தாண்டியது.

தற்போது காசல்ரீ மவுஸ்ஸாக்கலையின் நீர் கொள்ளளவு 70% ஐ தாண்டியுள்ளதுடன் சமனல குளம் மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 85% ஐ தாண்டியுள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 90 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டியிருந்தால், மின்சாரம் தயாரிக்க போதுமான நீர் மட்டம் காணப்படாது.

இந்தப் பின்னணியில் அதிக அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டியதன் காரணமாக நீர் மின் உற்பத்தியை விட ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என மின்வாரியப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலைமை காரணமாக, CEB தனது மின்சார உற்பத்தித் திறனில் 65% அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்தி ஏற்கனவே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை, அதிக சதவீதத்தில் இருந்த நீர்மின் உற்பத்தி திறன் 20% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version